Wednesday, June 22, 2011

உயிராட்டம்.


கண்ணில்  உனை காணா
மண்ணில் புதையேனே........
என்னில் விதையானாய்
விண்ணில் மரமானாய்.....
பெண்ணில் அழகென்றால்
மண்ணில் நீதானே........
புல்லும் உயிரென்பாய்
உயிராய் உனையெண்ணி
சருகாய்போன
எனை பாராயோ
சருகும் புல்லாகும்
புல்லும் சறுகாகும்
உயிராட்டம் இதுதானடி...........
என்னை பாராயோ........

Tuesday, June 21, 2011

ஞாபக பென்சில்கள்

                 
மறந்துபோன ஞாபகங்கள்
தொலைந்துபோன பென்சில்கள்...........
சின்னஞ்சிறு சிலை போல
கதைபேச முடியாமல்
நெடுந்தூரம் நடநதேனே..........
பகலவன் மறையும்
வேளையிலே பயணமும்
முடிந்தது..............
மறுநாள் கலையிலே நாம்
முகம் பார்க்க முடியாமல்
தடுமாறும்  வேளையிலே
தந்தாயே
காதல் கடிதம்.....
மறந்துபோன ஞாபகங்களை
மீட்டுப்பார்க்கிறேன்
தொலைந்து போன பென்சில்களை
தேடிப்பார்க்கின்றேன்.........