Saturday, November 11, 2017

பாகிஸ்தான் மண்ணில் மேற்கிந்திய தீவுகள்...

அடுத்த வருடம் மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் கிரிகெட் அணி பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு பயணிக்க காத்திருக்கின்றது.
மூன்று போட்டிகளை கொண்ட டி 20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடவுள்ளதாக  அந்நாட்டு கிரிகெட் சபை அறிவித்துள்ளது. இம்மாதம் தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் தர்க்க ரீதியான சவால்கள் காரணமாக தொடர் அடுத்த வருடம் மார்ச் மாததிற்கு பிற்போடப்பட்டுள்ளது.



மூன்று டி20 போட்டிகளும் மார்ச் 29 31 மற்றும் ஏப்பிரல் 1 திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிகெட் சபையின் தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.


 இந்நிலையில் இரு அணிகளும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, September 10, 2017

டெஸ்ட் போட்டிகளில் ஆறு மாத ஓய்வை கோரியுள்ளார் சக்கீப் அல் ஹஷன்....

சக்கீப் அல் ஹஷன் தனக்கு டெஸ்ட் கிரிகட் போட்டிகளில் ஆறு மாதங்களுக்கு ஓய்வு தேவைப்படுதாக கோரி பங்களாதேஷ் கிரிகட் கட்டுப்பாட்டு சபையிடம் கடிதமொன்றை சமர்பித்துள்ளார். இந்நிலையில் அதுதொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது. தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணிவிபரம் அறிவிக்க ஒரு மணித்தியாளத்துக்கு முன்னர் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.


சக்கீப்பின் விடயம் குறித்து பங்களாதேஷ் கிரிகட் கட்டுப்பாட்டு சபை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதத்தின் பின்னர் இலங்கை அணிக்கெதிரான தொடரில் அவர் விளையாட வாய்புள்ளதாகவும்  சக்கீப் நீண்ட காலம் சர்வதேச கிரிகட் போட்டிகளில் நீடிக்க விரும்புகிறார் போல தெரிகின்றது ...
" சக்கீப் அல் ஹஷன் ஆறு மாதங்களுக்கு ஓய்வு கோரியுள்ளார் என்பதை பங்களாதேஷ் கிரிகட்டின் ஊடக குழுவின் தலைவர் ஜலால் யூசுப் உறுதிபாடுத்தியுள்ளார்."

இந்நிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் பங்களாதேஷ் அணிக்கு நான்கு டெஸ்ட் போட்டிகள் காணப்படுகின்றன. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ் விளையாடவுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள்  2 T டுவென்டி போட்டிகளிலும்  இலங்கை அணியுடனான 3  ஒருநாள் போட்டிகள்  
T வென்டி போட்டிகளில் அவர் விளையாடுவார் எனக்கூறப்பட்டுள்ளது..
கடந்த பத்து ஆண்டுகளாக பங்களாதேஷ் கிரிகட்டின் மிக முக்கிய வீராக  மூன்று வகை போட்டிகளிலும் சக்கீப் அல் ஹஷன்  காணப்படுவதோடு , 2011 ஆண்டின் பின்னர்  T டுவென்டி போட்டிகளில் முக்கிய இடத்தை அனைத்து முக்கிய  T டுவென்டி தொடர்களிலும்  தக்கவைத்துள்ளார்.  இந்நிலையில் தற்போது  மூன்று விதமான போட்டிகளிலும் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் சக்கீப் அல் ஹஷன்  முதலிடத்திலுள்ளார்.

Wednesday, May 20, 2015

செந்த மண்ணில் விளையாடும் எதிர்பார்பில் உமர் அக்மல்

சிம்பாபே கிரிக்கட் அணியினர் பாக்கிஸ்தானில் விளையாடுவதற்கு தைரியமாக சென்றுள்ளதை பாராட்டியே ஆகவேண்டும்.
என்னதான் எதிர் அணிகளிடம் தோல்விகளை சந்தித்தாலும் சிம்பாபே அணி மனதிடமுள்ள அணி என்பதை நீரூபித்துள்ளது. 2009 ஆண்டு இலங்கை அணி பாக்கிஸ்தானில் சந்தித்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எந்தவொரு அணியும் பாக்கிஸ்தானுக்கு சென்று போட்டிகளில் விளையாடுவதில் அச்சத்தை வெளிப்படுத்தி வந்தன. எனினும் சிம்பாபே சிங்கங்கள்  அந்த அச்சத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
                                   
நேற்று லாஹூருக்கு சென்ற சிம்பாபே சிங்கங்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டதோடு நாளைமறுதினம் நடைடபெறவுள்ள T20  போட்டியிலும் களமிறங்கவுள்ளது.
இரண்டு  T20  போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலம் இரு அணிகளும் மேதவுள்ளன.
இந்நிலையில்  பாக்கிஸ்தான் தேசிய அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   Imad Wasim,   Nauman Anwarஎன்ற  அந்த அறிமுக வீரர்கள் விளையாடவுள்ள நிலையில் உமர் அக்மல் தான் செந்த மண்ணில் விளையாடுவது குறித்த எதிர்பார்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 2009  ஆண்டு  சர்வதேச கிரிக்கட்டில் கால்தடம் பதித்த உமர் அக்மல் பாக்கிஸ்தானில் முதன்முறையா சர்தேச  கிரிக்கட் அணியொன்றை எதிர்கொள்ளவுள்ளார்.

Thursday, May 14, 2015

புத்தகங்களை பற்றி புத்திசாலிகள்

''என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.
பெட்ரண்ட் ரஸல்.


 மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல்புத்தகம்என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்என்றாராம் நெல்சன் மண்டேலா.
                            நெல்சன் மண்டேலா.
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.
லெனின் 


  ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.
சார்லிசாப்லின்.


'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்என்றார் வின்ஸ்டன் சேர்ச்சில்
வின்ஸ்டன் சேர்ச்சில்

Friday, November 9, 2012

வழிகாட்டி

குருட்டு தோட்டாக்களுக்கு
இலக்கை நோக்கி
வழிகாட்டுகிறான்
கொலைகாரன்......