சச்சின் மீண்டும் தனது 100வது சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார். 1989 நவம்பர் மாதம் 15 திகதி பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் , 17 வது நிறம்பிய இளம் சச்சின் கிரிக்கட் உலகிற்கு வெளிப்பட்டார். அன்று தொடக்கம் இன்று வரை துடிப்புடன் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் கிரிக்கட் உலகின் ஜம்பவானின் 100வது சதத்தை உலக வாழ் கிரிக்கட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். எதிர் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சச்சினின் துடுப்பாட்டம் சிம்மசொப்பனமே.
அவர் ஒருநாள் போடடிகளில் 48 சதங்களையும் 95 அரைச்சதங்களையும் பெற்றுள்ளதோடு , டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் 63 அரைச்சதங்களை பெற்று தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவருகின்றார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேனில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டி சச்சினின் களமாக அமையுமா? இரண்டாம் இன்னிங்ஸிலாவது சதம் பெற்றும் சந்தர்பம் ஏற்படவேண்டும். தனது ரசிகர்களுக்கு சச்சின் இன்ப அதிர்ச்சி வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்………….







