Tuesday, December 20, 2011

இந்திய அணி குறித்து இயன் செப்பல் ஆரூடம்...


அவுஸ்திரேய மண்ணில் இதுவரை டெஸ் தொடரை வெற்றிபெறாத இந்திய அணி இம்முறை டெஸ் தொடரை முதல் முறையாக வெற்றிகொள்ளுமென அவுஸ்திரேய அணியின் முன்னாள் தலைவர் இயன் செப்பல் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
                                                   
                                                 
1964ம் ஆண்டு முதல் 1980 ம் ஆண்டு வரை பதினாறு வருடம்  டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் கொண்ட செப்பல்  14 சதங்கள்  26 அரைச்சதங்களை பெற்றுள்ளார். அவரது எதிர்வுகூறலை மகேந்திரசிங் தோணி தலைமையிலான இந்திய அணி உறுதிசெய்யுமா என்ற கேள்விக்குறி எல்லோருடைய மனதிலும் எழுந்துள்ளது. 

                               
நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியில் விரேந்திர ஷேவாக்கின் அதிரடியான துடுப்பாட்டமும் ஷயிர் கானின் வேகபந்து வீச்சும் வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்துமென செப்பல் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியில் மாஷ் ,வொட்சன் , மிச்செல் ஜோன்ஸன் ஆகிய முத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளமை இந்திய அணிக்கு வாய்ப்பாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடர்ச்சியாக போதிய போர்ம் (form) இல்லாமல் தவித்துவரும் ரிக்கிபொன்டிங் மீண்டும் தனது பழைய துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவாரெனவும் இயன் செப்பல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
                              
இது எந்தளவு உண்மையாகபோகிறது , எதிர்வரும்  26 போட்டி ஆரம்பமாகி முடியும்வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்…..



No comments:

Post a Comment