Thursday, December 9, 2010

நிலவே நீயும்

நிலவே  நீயும்  தூய
தமிழாள் - என்
முப்பாட்டன்  காலத்தினில்
அமெரிக்கனும்  ரஷ்யனும்    
உன்  பக்கம்  வந்து போனதால்
என்னவோ - உன்
தமிழில்  எத்தனை
கலப்படங்கள் ?
ஏன்  இத்தனை  படுகொலைகள்
உன்  நாவினில்  புரிகின்றாய் 
நிலவே  நீயும் "தமிழை "
"தமில்" என்கிறாய்
"பழத்தை" "பலம் "  என்கிறாய்
இது  உன்  பலமில்லை
பலவீ னமே !
அகத்தியர் முதல் ஓளவை  வரை 
வளர்த்த "தமிழ்" உன் வார்த்தைகளில்
அகப்பட்டு  வலது  குறைந்த  தமிழாய்
வாழ்கிறது
வாழும்  தமிழை  வளர்ப்போம் 
வா  எந்தன்  நிலவே "பலம் " பெறுவோம்
"பழம்" சுவைப்போம்..... 
           
                                                

No comments:

Post a Comment