நிலவே நீயும் தூய
தமிழாள் - என்
முப்பாட்டன் காலத்தினில்
அமெரிக்கனும் ரஷ்யனும்
உன் பக்கம் வந்து போனதால்
என்னவோ - உன்
தமிழில் எத்தனை
கலப்படங்கள் ?
ஏன் இத்தனை படுகொலைகள்
உன் நாவினில் புரிகின்றாய்
நிலவே நீயும் "தமிழை "
"தமில்" என்கிறாய்
"பழத்தை" "பலம் " என்கிறாய்
இது உன் பலமில்லை
பலவீ னமே !
அகத்தியர் முதல் ஓளவை வரை
வளர்த்த "தமிழ்" உன் வார்த்தைகளில்
அகப்பட்டு வலது குறைந்த தமிழாய்
வாழ்கிறது
வாழும் தமிழை வளர்ப்போம்
வா எந்தன் நிலவே "பலம் " பெறுவோம்
"பழம்" சுவைப்போம்.....

No comments:
Post a Comment